இளகிய மனது – வீரான்குட்டி

அன்று நீ

எறும்புகள் போய்ச் சேரும்வரை காத்திருந்தாய்

தேநீர்க்கோப்பையைக் கழுவுவதற்கு

காலின் அடியில்

ஏதேனும் பிராணிகள் நசுங்கிவிடுமோ என

மெல்ல அடிகள் வைத்தாய்

பூவினைக் காம்புடன் விட்டுவைத்தாய்.

புறாக்கூண்டு திறந்து வைத்தாய்

இல்லையென்றாலும்

அன்பு தட்டி

இளகிய மனதை

யாரால் எளிதில்

ஒளித்துவைக்க முடியும்!

Leave a Reply

%d bloggers like this: